கண்டஙகள் சுழற்சியால் கடல்கொண்டாலும் பழந்தமிழகத்தை கண்டறிய வேண்டாமா நம் குமரிக்கண்ட வரலாற்றை - நந்திவர்மன் பொதுச்செயலாளர் திராவிடப்பேரவை

180 மில்லியன் ஆண்டுகள் முன்பு அண்டார்டிகாவை மையமாகக் கொண்ட பெருநிலப்பரப்பு ஒன்றிருந்தது என "பிரிட்டிசு அண்டார்டிகா சர்வே"யின் இணையதளம் தெரிவிக்கிறது. தென்னமரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆசுதிரேலியா, நியுசிலாந்து ஆகிய ஒருங்கிணைந்த பெருநிலப்பரப்பின் மையத்தில் அண்டார்டிகா இருந்தது. அந்த பெருநிலப்பரப்பை கோணடுவானா என்று பெயரிட்டு அழைத்தார்கள். கோண்டுவானாப் பெருநிலத்தின் அடியில் ஓரிடத்தில் வெந்தணல் கனன்று கொண்டிருந்தது. அது உண்டாக்கிய எரிமலைப் பிரதேசம் ஒன்றிருந்தது. அந்த எரிமலைப் பிரதேசத்தின் எச்சங்களை தென்னாப்பிரிக்காவிலும் படகோனியாவிலும் அண்டார்டிகாவிலும் தாசுமேனியாவிலும் இன்றும் காணலாம் என்கின்றனர் அறிவியல் வல்லுனர்கள். கோண்டுவானா உடைந்து பிரிந்தது மூன்று கட்டங்களாக நிகழ்ந்தது. தென்னமரிக்காவும் ஆப்பிரிகாவும் மேற்குப் பகுதிகளாக பிரிந்தன. அண்டார்டிகாவும் ஆசுதிரேலியாவும் இந்தியாவும் நியுசிலாந்தும் கிழக்காகவும் பிரிந்தன. 150 மில்லியன் ஆண்டு முன்பு நிகழ்ந்த அந்தப் பிரிவினால் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே கடல்பாதை தோன்றிற்று.

இரண்டாவது கட்டமாக 130 மில்லியன் ஆண்டு முன்பு ஆப்பிரிக்க-இந்தியத்தட்டில் இடம் பெற்றிருந்த தென்னமரிக்கா அதிலிருந்து கழன்று கொண்டது. தென்அட்லாண்டிக் கடல் திறந்து கொண்டதால் இது நிகழ்ந்தது. இந்துமாக்கடலின் தரை விரிவாவதால் அண்டார்டிகாவிலிருந்து ஆப்ரிக்க-இந்திய தட்டு பிரிந்தது. கடைசியாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும் நியுசிலாந்தும் பிரிந்தன. கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு எதுவெனில் தென்அட்லாண்டிக் பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட குறுந்தட்டுகளாக அது உடைந்து பிரிந்து சிதறியதைக் குறிப்பிட்டாகல் வேண்டும்.

650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும், இந்தியாவும், தென்னமரிக்காவும், ஆப்பிரிக்காவும் அண்டார்டிகாவும் ஒரே கண்டமாக விளங்கின. அங்கிருந்து தான் தமிழர் வரலாற்றை நாம் தொடங்க வேண்டும். வடவேங்கடம் தென்குமரி இடையிலான தமிழ்கூறும் நல்லுலகம் நம் வரலாற்றின் இறுதிக்கட்டம். முதற்கட்டம் கோண்டுவானாப் பெருங்கண்டத்தில் துவங்குகிறது. அந்தக் கண்டத்தை இலெமூரியாக் கண்டம் எனவும் அழைப்பர். குமரிக்கண்டம் என்றும் கூறுவர். கோண்டுவானா பெருங்கண்டத்தின் நிலம்வளர் தாவரங்கள் பற்றியும் நீர்வாழ் மீனினம் பற்றியும் அங்கு திரிந்த விலங்கினங்கள் பற்றியும் கலிபோர்னியப் பல்கலைக்கழகம் பல அரிய உண்மைகளை கண்டெத்துச் சொல்லியுள்ளது.

கடினப்பாறைகள் பல அடங்கிய பெருந்தொகுதி ஒரு கூட்டமாக நகருவதை 1960 ல் அறிஞர்கள் தட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ஒரு தட்டின் மீதமர்ந்ததிருந்த கண்டங்களும் கடல்களின் தரையும் அந்தத் தட்டு நகரும்போது நகர்வதனை Plate - tectonics என்று பெயரிட்டனர். 1912ல் தொடங்கிய ஆய்வு 1960 ல் பெயரிடுவதில் முடிந்தது. 1912 ல் ஆல்பிரட் வெக்கனர் அவர்களும் பிராங்க் டெய்லர் அவர்களும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உலகம் ஒரேயொரு பெருங்கண்டமாக விளங்கியது என்றும் அதிலிருந்து பிரிந்து வெவ்வேறு திசைகளில் நகர்ந்து சிதறியவையே இன்றுள்ள கண்டங்கள் எனவும் கண்டறிந்தனர்.

ஆல்பிரட்டு வெக்னர் (1880-1930) செருமானிய வானவியல், நிலவியல் அறிஞராவார். கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின் தந்தையாக அவர் போற்றப்படுகிறார். அவரது "ORIGIN OF CONTINENTS AND OCEANS" என்ற நூல் உலகமே ஒரே கண்டமாக விளங்கிய உண்மையை உரைத்தது. அந்தக் கண்டத்திற்கு பங்கேயா என அவர் பெயரிட்டார். பங்கேயா என்றால் எல்லா நிலமும் All Earth என்ற பொருள் தரும் சொல்லாகும். நாம் அந்தப் பெருங்கண்டத்தைப் பற்றி அறிந்தாக வேண்டும். கல்தோன்றி, கற்களின் பெருந்திரள் தொகுதிகள் நகர்வதே கண்டங்களின் சுழற்சி எனில் கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பற்றி நுண்மாண் நுழை புலமொடு சொல்லிய தமிழ்க் கவிஞனையும் நாம் நினைவு கூர்ந்தாகல் வேண்டும்.

உலகத்தின் வரைபடத்தில் - இன்றுள்ள கண்டங்களை தனித்தனியே வெட்டி எடுத்து வைத்துக் கொண்டு அவை ஒன்றுடன் ஒன்று பொருந்துகிறதா என்று பார்த்தவர் ஆல்பிரட் வெக்னர். ஒரு புதிரை விடுவிப்பது போல அவர் தேடினார். படங்களை பொருத்தி வெற்றி கண்டார். எல்லாக் கண்டங்களின் படங்களும் பொருந்தின. ஒன்றாக இருந்த பெருங்கண்டமே உடைந்தது என நிறுவ இது அவருக்கு கிட்டிய முதல் சான்றாக அமைந்தது. தெனன்மரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டெக்கப்பட்ட விலங்கினங்களின் மற்றும் தாவரங்களின் புதை வடிவம் பொருந்துவதைக் கண்டறிந்தார். இரு கண்டங்களின் பாறைகளும் பொருந்துவதை அறிந்தார். பனிப்பாறைகளின் உறைநிலைப் படிவங்கள் தென்னமரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் ஆசுதிரேலியாவிலும் 300 மில்லியன் ஆண்டுகள் முன்பு படர்ந்திருந்தன. தெற்கு பகுதிக் கண்டங்கள் மீது பனிப்பாறைகள் படர்ந்திருந்தது போல வடக்கிலுள்ள கண்டங்கள் மீது ஏனில்லை? வட கண்டங்கள் நிலநடுக்கோட்டருகில் அப்போது இருந்திருக்கக் கூடும்.

ஆல்பிரட் வெக்கனரின் கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியது. HAROLD JEFERY ஒரு கேள்வி எழுப்பினார். கடினப்பாறைகள் நிறைந்த பெருநிலப்பரப்பு எவ்வாறு கடலின் தரையை உழுதவண்ணம் நகர்ந்திருக்க முடியும்? கடலின் தரை அதனால் உடைந்திருக்காதா? விரிசல் விட்டிருக்காதா? என்று வினா எழுப்பினார். வினாக்கள் எழுப்பாமல் விடைகள் கிடைப்பதில்லை. விஞ்ஞானம் புதிர்களை விடுவிக்கக் கேள்விகளே காரணமாக அமைந்தன. அறிவாளர்கள் என தனிக் கூட்டத்துக்கு முத்திரை குத்தி ஆய்வு நம் பணி அல்ல எனத் தமிழர்களாகிய நாம் நினைக்கிறோம். மேனாடுகளில் மக்களும் ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான் அந்நாடுகள் அறிவியலில் முன்னேறுகின்றன. நாம் பின்தங்கியுள்ளோம். JUERGEN HENRICHS என்பவர் அப்படி ஆய்வு செய்பவர். தமது வினாக்களை இணையத்தில் பதிவு செய்து அதனைப் படிப்பவர்களிடம் பதில் கிடைக்குமா என எதிர்பார்ப்பவர். அவர் செருமானியர். Scientific American என்ற ஏட்டை ஆங்கிலத்தில் அவர் படிக்கவில்லை. செருமானிய மொழிப் பதிப்பு வழியாகப் படித்தார். தாய்மொழி வழியில் அவர் படித்ததால் அவரால் சிந்திக்க முடிந்தது. விஞ்ஞானியர் பன்னெடுங் காலமாகச் சூரியனின் Photospere நடுநிலைக் கோட்டருகே (Equator) வேகமாகக் சுழல்வதை அறிந்துள்ளனர். துருவங்கள் அருகே அவ்வாறு வேகமாகச் சுழல்வதில்லை. அதில் Photospere என்றால் என்ன? ஞாயிறு - விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஔ¤க்கோசம் என பேராசிரியர் அ.சிதம்பரநாதர் செட்டியார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1965ல் வௌ¤யிட்டு 1988 ல் மறுமதிப்பு செய்யப்பட்ட ஆங்கிலத் தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழக வௌ¤யீடு கூறுகிறது. மொழிபெயர்ப்புச்சிக்கல் காரணமாகவே ஆங்கிலங்கலந்த தமிழ் என்னும் புதிய மணிப்பிரவாளம் வழக்காற்றில் உள்ள உண்மையை உணர வேண்டும். உணர்ந்து நாணுற வேண்டும்.

"When rotating objects contract, the core, becoming more compact, rotates faster than surface a difference that is necessarily most marked at the equator and least at the poles". இது அந்த தன்னார்வ ஆய்வாளரின் விளக்கமாகும். அவ்வாறு விளக்கமளிக்கும் அவர் "Continents are being carried along by an eastward equatorial stream in the earth's mantle, driven by the earth's core rotaing faster than surface" இவைகளை தமிழாக்கி என்னால் தரமுடியும். ஆனால் ஆங்கில வழிக்கல்வி கற்ற உங்களுக்குப் புரியவேண்டுமானால் ஆங்கிலத்தில் தருதலே சிறப்பு என எண்ணி அவ்வாறு தந்துள்ளேன். எல்லா நிலநடுக்கமும் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார். குடிமகன் ஒருவனுக்கும் குவலயத்தில் நிகழும் நிகழ்வுகளுக்குரிய காரணங்களை கண்டறியும் துடிப்புள்ளது கண்டு தமிழ்க்குடிமகன்கள் நாணிட வேண்டாமா? ஈட்டிய பொருளை குடிக்கக் செலவிட்டு குடும்பத்தையே மறந்துவிடும் குடிமகன்கள் உலகின் பிறநாட்டு குடிமகன்கள் போல நேரத்தையும் நினைப்பையும் உலகின் நிலைபற்றி ஆராயச் செலவிடும் நாள் வந்தால் அந்நாளே தமிழர் வரலாற்றில் பொற்காலமாகப் போற்றப்படும். அண்ணா பேசிய பேச்சு நிலையும் நினைப்பும் உங்கள் நினைவில் நிழலாடவில்லையா! நினைப்பு உயர்ந்தால் தான் நாட்டின் நிலை உயரும் என்றாரே நம் உயிரினில் கலந்து உணர்வினில் வாழும் ஒப்பிலாப் பேராசான் அறிஞர் அண்ணா. உள்ளுவதுள்ளும் உயர்வுள்ளல் என்ற வள்ளுவமும் அண்ணன் கருத்தை ஒத்ததே!

64,186,000 சதுர மைல் பரப்புள்ள பசிபிக் பெருங்கடல் சராசரியாக 15,215 அடி ஆழமுடையது. மரியானா பகுதியில் போட்ட குழி 36,200 அடி ஆழமுடையதாக இருந்தது. அட்லாண்டிக் பெருங்கடலின் பரப்பளவு 33,420,000 சதுர மைல்களாகும். சராசரியாக 12,881 மைல் ஆழமும் போர்ட்டோரீகா அருகில் 28,231 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் 28,350,000 சதுர மைல் பரப்புள்ளது. சராசரியாக 13,002 மைல் ஆழமும் சாவா அருகில் 25,344 அடி ஆழமும் கொண்டது. ஆர்டிக்கடல் 5106 சதுர மைல் பரப்பும் சராசரியாக 3953 அடி ஆழமும் கொண்டது. ஈராசியா அருகில் 17,881 அடி ஆழமுடையது. நிலவுலகின் 70 சதவீத பரப்பை கடல்களே நிறைந்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது நமது கடல்களைப் பற்றிய தௌ¤வான அறிவு நமக்கு வேண்டாமா? உழுதுண்டு வாழவாரே வாழ்வர் எனவும் உழவர்களே உலகிற்கு அச்சாணி எனவும் வள்ளுவம் நிலத்தில் உழுது பயிரிடும் உழவரைப் பாராட்டுகிறது. கடலில் நமக்காக மீன்களை வேட்டையாடி வரும் மீனவரும் உழவர்போல் தொழத் தக்கவரே என்பது என் கருத்து. மீனவர்கள் அரும்பாடுபட்டு நமக்களிக்கும் மீனைச் சுவைத்து உண்ணுகிறோம். உழவர் திருநாள் போல் மீனவர் திருநாளை உலகினர் ஏன் கொட்£டுவதில்லை? நான் அச்சாதியினன் அல்லன். எச்சாதியினனும் அல்லன். உலகின் 97 சதவீத நீர் கடலில் தான் உள்ளது. மீன்களுக்காக இல்லாவிடினும் முத்துக்களுக்காக இல்லாவிடினும் நீர் நிறை கடலே நம் குடிநீர்த் தேவைக்கும் ஈடுகொடுக்கும் என்பதற்காகவாவது நமது கடல்கள் பற்றித் தமிழர்கள் அய்வு செய்ய வேண்டாமா?

ஞால நிலப்பாகம் இன்றுள்ளவாறு 5 கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொனறு தொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana) பாலதிக்கம் (Baltica) அமசோனியம் (Amazonia) அங்காரம் (Angara) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒரு சில தீவுகளாகவும் பகுத்திருந்தது என்ற தேவநேயப் பாவாணர் தம் தமிழர் வரலாறு நூலில் வி.ஆர். ராமச்சந்திர தீட்சதர் எழுதிய வரலாற்று முன்னைத் தென்னிந்தியா எனும் நூல் கருத்தை பதித்துள்ளார்.

நாவலந் தீவே இறலித் தீவே
குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே
சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழுபெரும் தீவும் ஏழ்பொழி லெனப்படும்

என்பது திவாகர நிகண்டு ஏழு கண்டங்களாக ஞாலம் இருந்ததை திவாகர நிகண்டு வழி அறியலாம்.

உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும் பற்றிய அதிகாரத்தில் ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும் போது எக்கெல் இந்து மாவாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்ரிக்காவின் கீழ்கரை வரைக்கும் பரவி இருந்த ஒரு கண்டமாயிருந்தது என்பார்.

கிளேற்றர் இப்பழங்காலப் பெருங்கண்டத்திற்கு அதில் வதிந்த குரங்கொத்த உயிரி பற்றி இலெமூரியா என்று பெயரிட்டுள்ளார் எனவும் பாவாணர் "தமிழர் வரலாறு" எழுதுகையில் பதிந்துள்ளார். இலக்கியச் சான்றுகள் ஏற்புடையன அல்ல என்று தமிழிலக்கியச் சான்றுகளை ஒதுக்கித் தள்ளுவோர் உள்ளனர். இலமூரியா பற்றித் தமிழர் கூறினால் நீங்கள் ஏற்கத் தயங்குவீர்கள். ஆங்கிலேயர் கூறினால் ஆகா! ஆகா! என நீங்கள் மெச்சக்கூடும். இங்கு கூறுபவர் ஆங்கிலேயரல்ல. பிரெஞ்சுக்காரர்.

James Churchward 5 நூல்கள் எழுதினார். அவை 1. The Lost continent of Mu 2. The Children of Mu 3. The Sacred Symbols of Mu 4. The Cosmic Forces of Mu 5. The Second Book of the Cosmic Forces of Mu சேம்சு சர்ச்வார்டின் நண்பர் அகத்தும் அவர் மனைவி அலிசுலெ பிளங்கோனும் மாயன் நாகரிகம் பற்றிய ஆய்வுகளுக்காக மத்திய அமெரிக்க காடுகளில் திரிந்தவர்கள். பல பழைய இலக்கிய சுவடிகளை கண்டெடுத்தார்கள். அதனை மொழி பெயர்த்தார்கள். மாயன் நாகரிகத்தில் அரசி மூ கோலோச்சினாள். அதைக் கொண்டு அவர்கள் இலமூரியாக்கண்டத்தை மூ என்று அழைத்தார்கள். மூ என்னும் கண்டம் 5000 மைல் நீண்டது. 3000 மைல் அகண்டது என சேம்சு சர்ச்வார்டு கூறுகிறார். அந்தப் பிரெஞ்சு தம்பதிகள் கண்டெடுத்த மாயன் நாகரிக இலக்கிய ஏடுகளில் இருந்து தானறிந்தவற்றை சேம்சு சர்ச்வார்டு மேற்சொன்ன 5 நூல்களில் பதிவு செய்தார். மறைந்த மூ கண்டம் 60000 ஆண்டு முன்பு ஒரு கொடி நிலநடுக்கத்தின் காரணமாக பசிபிக் பெருங்கடலில் மூழ்கியதாக அவர் கூறுகிறார். அவாய் தீவுகளும் பசிபிக் தீவுகளும் மறைந்த அந்தக் கண்டத்தில் மலைகளாக இருந்த உயர்ந்த சிகரங்களாக விளங்கியமையால் கடலுள் மூழ்காமல் மிச்ச முள்ளவை என்கிறார் அவர். மறைந்த கண்டம் பற்றி கல்வெட்டெழுத்துகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் மறைந்த கண்டத்தின் வரைபடம் செதுக்கப்பட்டிருந்தது. டாக்டர் சேவியர் காப்ரெழா அக்கல்வெட்டை கண்டெடுத்தார். இராபர்ட் சாரௌக்க அதனைப் புகைப்படம் பிடித்தார். ஐக்கிய நாடுகளின் தலைவர் ஆதம் மாலிக்கின் செயலரான பரீதா இசுகோவியத் 1972 ல் Mauiக்கு வந்தார். அங்கிருந்த அழிவுகளையும் வரலாற்றையும் ஆய்ந்து அவை உண்மை எனும் முடிவுக்கு வந்தார். 50000 ஆண்டு முன்பு இலமூரியா(அ)மூ கண்டம் மறைந்த போது 2000த்துக்கு மேல் தமிழர்களாகிய எங்களுக்கு எண்ணிக்கை தெரியாதே? மேடைதோறும் ஈராயிரமாண்டு நாகரிகம் எமதென்று கிளிப்பிள்ளைகள் போல் சொல்லும் புலவர் கூட்டம் எங்களுடையது என்கிறீர்களா? மாயன் நாகரிகமாவது 50000 ஆண்டு சென்னையை ஒட்டியுள்ள பூண்டியில் 100000 ஆண்டு முன்பு தமிழன் வாழ்ந்தான். நம்ப மறுக்கிறீர்களா? New India Express செப்டம்பர் 6-2004 இதழின் முதல்பக்கத்தைப் பாருங்கள். நாங்கள் பத்திரிகை படிக்கும் பழக்கமில்லாதவர்கள் என்று தப்பிக்க பார்க்காதீர்கள்.

One Lakh Years ago People Lived in Poondi முதல் பக்கத்தில் எல்லாப் பதிப்புகளிலும் வௌ¤யான செய்தி. தமிழக அரசின் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு பற்றிய செய்தி. கண்டெடுத்த அறிஞர்களை போற்றுவோம். கடல்கொண்ட குமரிக் கண்டத்தை கடலடியில் தேடுவோம்.